Skip to main content

கொஞ்சம் காதலித்துத் தொலையேன்...




ஏண்டா இப்படிக் காதலிச்சு என்
உயிரை வாங்கற..?
என அழகாக நீ
அலுத்துக்கொள்ளும்போது
என் உயிரை வாங்குவது
என்னவோ நீதான்...





எப்படி என்னை
உன்னுடன் கூட்டிபோவது
எனக்கேட்கிறாய்
நான் வேண்டுமானால்
உன் துப்பட்டாவுக்குள்
ஒளிந்துகொள்ளட்டுமா?






தாவணி கட்டினால்
இடுப்பு தெரியும்
கட்டமாட்டேன் என
ஏன் அடம் பிடிக்கிறாய்?
சரி விடு அப்போ
என்னையாவது
கட்டிக்கொள்
உன் இடுப்பை மறைத்துத்
தொலைக்கிறேன்





நீ எனக்குச் சேலை கட்டக்
கற்றுக்கொடுப்பதற்குள்
போதும் போதும்
என்றாகிவிடுகிறது போடா..
கட்ட ஆரம்பிப்பதற்குள்
என்னைக் கட்டிக்
கொல்கிறாய்...





எனக்கு கல்யாணம்
கட்டிக்கவே பிடிக்கலை
எனச் சொல்லிவிட்டு
சென்றால் எப்படி??
அப்படியென்றால்
என்னையாவது
கட்டிக்கொள்ளேண்டி ??





எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?





உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!






அட இவ்வளவு மென்மையான
மனசா உனக்கு என நிஜமாகவே
நான் கேட்டால் ஏண்டி
உடனே என்னை முறைத்துவிட்டு
மறைத்துக்கொள்கிறாய்???
நான் நெஜம்மா மனசைத்தான் கேட்டேன்
தெரியுமா ?






உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...






நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது







Excuse me !
என்னைக் கொஞ்சம்
கண்டுபிடித்துத்
தரமுடியுமா ?
உன் கண்ணுக்குள்
தான் எங்கோ
தொலைந்துபோனேன்




எத்தனை முறை
நீ கேட்டாலும் பதில்
சொல்ல அலுக்காத
கேள்வி ...
என்னை அவ்வளவு
பிடிச்சுருக்காடா..??




என்னைக் கட்டிகொள்
என நான் கேட்டது
என்னைக் காதலில்
கட்டிக் கொல் என்ற
அர்த்தத்தில் தான்...






போன ஜென்மத்தில்
நீ ஒரு கொள்ளைக்காரியாகத்தான்
இருந்திருக்க வேண்டும்
அடிக்கடி கொள்ளை
போகிறது என் மனம்
உன் சிரிப்பினால்..






உன் அழகே
அழகான உன்
சிந்தனைதான்
தெரியுமா?






உன்னைக் கட்டிகிறவ
கொடுத்து வச்சவடா என்கிறாய்
அந்தக்கொடுத்து வச்சவ
யாருன்னு தெரியணுமா ?
போய்க் கண்ணாடியிலே பாருடி
முட்டாளே...

நன்றி,
நட்புடன்
கணபதி...

Comments

Popular posts from this blog

அப்பா...

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை... அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என... கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்..? லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில்... அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்..? எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார...

இன்னும் சில முத்தங்கள்...

கண்களில் தொடங்கி கன்னத்தில் வழிந்து இதழ்களில் தேங்கும் உன் வெட்கத் திருவிழாவில் நான் தொலைந்து போய்விட்டேனடி... எப்படியாவது என்னைக் கொஞ்சம் தேடி  எடுத்துக் கொஞ்சேன்... இறுக்கி இறுக்கி அணைத்துக் கொள்கிறாய் என்னை உன் நினைவுகளில் நேரில் வந்தால் மட்டும் அதே இறுக்கத்தோடு அணிந்து கொள்கிறாய் உன் வெட்கத்தை... இன்று மட்டுமாவது உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ... முத்தச் சத்தத்திலேயே உறங்கி உன் இதழின் ஈரத்திலேயே  விழித்துப் பழகி விட்டேன் இப்படி ஊடல் என்ற பெயரால் எனக்கு உறக்கமும் விழிப்பும் இல்லாமல் செய்து விட்டாயடி... சங்கொலி கேட்டுத் தொடங்கும் போர் போல உன் சிணுங்கல் ஒலியில் தானே  தினமும் தொடங்குகிறது நமது முத்தப் போர் உன் வெட்கத்தை வெல்லாமல் என்றும் முடியப்போவதில்லை இந்தக் காதல் போர்... ஒவ்வொரு முறையும்  பாடத்தில் தவறு செய்யும் போது ...

உனக்காக மட்டும்....

உன்னிடம் எனக்கு மிகவும் பிடித்ததை நான் சொன்னபோது உன் முகம்போன போக்கையும் கை போன போக்கையும் காண கண்கோடி வேண்டுமடி... நான் பார்க்கும்போது வெளிப்படும் வெட்கங்களையும் மற்றவைகளையும் நீ மறைக்கபடும் பாடு இருக்கிறதே உன் வெட்கங்களைவிட அவை மிக அழகாக இருக்கின்றன... முத்தம் கொடுக்க வெட்கமாக இருக்கிறதென சாக்கு சொல்லித்திரிகிறாயே நான் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்கிறேன் அப்பொழுதாவது கொடுத்துத்தொலையேன்... ஏதோ நீ கேட்டதால் தானே சொன்னேன் அதற்காக இனி என் முன்னே நடக்கவே மாட்டேன் என ஏணடி அடம்பிடிக்கிறாய்..? அப்படி முறைக்காதேடி... நிஜமாகவே ரகசியம் சொல்லத்தான் கூப்பிட்டேன்.. காதுக்குள் நிற்க இடமில்லாமல் தானாகவே வழுக்கி கன்னத்தில் விழுந்துவிட்டன என் இதழ்கள் ஏதோ வழிதெரியாமல் தெரியாத்தனமாக உன் இதழருகில் வந்துவிட்டது போல எப்படி நடிக்கின்றன பார் என் இதழ்கள் ?! உன் இதழ்களால் அவைகளை நன்றாக புரட்டி எடு.. வருவியா வருவியா என... ஒன்றேயொன்று கொடுக்கவே யோசித்தவள் நீதானா என திக்குமுக்காடிப் போனேன் உன் உதடுகளின் வேகம் கண்டு... போடா .. நீ அருகில் வர வர நான் விலகிபோகலாம் என்றால் என் வெட்கங்கள்தான் விலகிப்போய்கொண்டே இருக்க...