Skip to main content

கொஞ்சும் இன்பம்...




எனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரை




கொஞ்சம் என்னை திட்டு
என்னை திட்டிவிட்டு
நீ கெஞ்சுவதைப்போல்
கொஞ்சுவது
எனக்கு மிகவும் பிடிக்கிறது




இப்பொழுதெல்லாம் நான்
அடிக்கடி அழகாக
வெட்கப்படுகிறேனாம்
சொல்கிறார்கள் என் தோழிகள் !
நீ தொலைபேசி வழியே என்னுடன்
பேசும்போது கூட
சும்மா இருந்தால் தானே ?





உன்னைபோலவே
இந்த காற்றும்
சும்மாவே இருப்பதில்லை
பார் என் மேலாடையை
சும்மா விடுகிறதா ?





முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்




வர வர உன் குறும்புக்கு
ஒரு எல்லையே இல்லாமல்
போய்விட்டது
நான் வேண்டாம் என்றாலே
உடனே அதை செய்ய
ஆரம்பித்துவிடுகிறாய்.





என் மனதில் நீதாண்டா
இருக்கிறாய் என ஏன் தான்
சொன்னேனோ
எங்கே காட்டு என
இப்படி என் உடை
கலைத்தால் எப்படி ?




நீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!
ஏன் இப்படி கூறி என் வெட்கத்தை
சிதறடிக்கிறாய் ?




சமயலறையில் வந்து
ஏன் இப்படி தொல்லை செய்யுறே
இப்போ என்னை சமையல் செய்ய
விடப்போறியா இல்லையா
என நான் கோவமாக
சொன்னாலும் பொய்யாகத்தான்
சொல்கிறேன் என
எப்படிடா கண்டுபிடிக்கிறாய் ?



உனக்காக நான் சமைத்த
பலகாரம் எப்படி இருக்கிறது
எனக்கேட்டால்
உன் உதடுகளை விட
ஒன்னும் சுவையாக இல்லை
என்றால் எப்படி ?
எப்படி திட்டுவேன் உன்னை இனி ?



என்னை சினிமாவிற்கு
கூட்டிகிட்டு போ என்றால்
வீட்டிலேயே உனக்கு நான்
படம் காட்டுகிறேன் என்கிறாயே
திருடா !!
நீ என்ன படம் காட்டுவாய்
தெரியாதா ?


நம் தேனிலவுக்கு எங்கே
செல்லலாம் என கேட்டால்
கட்டிலுக்கு என்கிறாயே
சீசீய்... வர வர உன்னை....


நன்றி,
நட்புடன்
கணபதி...

Comments

Popular posts from this blog

அப்பா...

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை... அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என... கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்..? லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில்... அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்..? எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார...

இன்னும் சில முத்தங்கள்...

கண்களில் தொடங்கி கன்னத்தில் வழிந்து இதழ்களில் தேங்கும் உன் வெட்கத் திருவிழாவில் நான் தொலைந்து போய்விட்டேனடி... எப்படியாவது என்னைக் கொஞ்சம் தேடி  எடுத்துக் கொஞ்சேன்... இறுக்கி இறுக்கி அணைத்துக் கொள்கிறாய் என்னை உன் நினைவுகளில் நேரில் வந்தால் மட்டும் அதே இறுக்கத்தோடு அணிந்து கொள்கிறாய் உன் வெட்கத்தை... இன்று மட்டுமாவது உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ... முத்தச் சத்தத்திலேயே உறங்கி உன் இதழின் ஈரத்திலேயே  விழித்துப் பழகி விட்டேன் இப்படி ஊடல் என்ற பெயரால் எனக்கு உறக்கமும் விழிப்பும் இல்லாமல் செய்து விட்டாயடி... சங்கொலி கேட்டுத் தொடங்கும் போர் போல உன் சிணுங்கல் ஒலியில் தானே  தினமும் தொடங்குகிறது நமது முத்தப் போர் உன் வெட்கத்தை வெல்லாமல் என்றும் முடியப்போவதில்லை இந்தக் காதல் போர்... ஒவ்வொரு முறையும்  பாடத்தில் தவறு செய்யும் போது ...

உனக்காக மட்டும்....

உன்னிடம் எனக்கு மிகவும் பிடித்ததை நான் சொன்னபோது உன் முகம்போன போக்கையும் கை போன போக்கையும் காண கண்கோடி வேண்டுமடி... நான் பார்க்கும்போது வெளிப்படும் வெட்கங்களையும் மற்றவைகளையும் நீ மறைக்கபடும் பாடு இருக்கிறதே உன் வெட்கங்களைவிட அவை மிக அழகாக இருக்கின்றன... முத்தம் கொடுக்க வெட்கமாக இருக்கிறதென சாக்கு சொல்லித்திரிகிறாயே நான் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்கிறேன் அப்பொழுதாவது கொடுத்துத்தொலையேன்... ஏதோ நீ கேட்டதால் தானே சொன்னேன் அதற்காக இனி என் முன்னே நடக்கவே மாட்டேன் என ஏணடி அடம்பிடிக்கிறாய்..? அப்படி முறைக்காதேடி... நிஜமாகவே ரகசியம் சொல்லத்தான் கூப்பிட்டேன்.. காதுக்குள் நிற்க இடமில்லாமல் தானாகவே வழுக்கி கன்னத்தில் விழுந்துவிட்டன என் இதழ்கள் ஏதோ வழிதெரியாமல் தெரியாத்தனமாக உன் இதழருகில் வந்துவிட்டது போல எப்படி நடிக்கின்றன பார் என் இதழ்கள் ?! உன் இதழ்களால் அவைகளை நன்றாக புரட்டி எடு.. வருவியா வருவியா என... ஒன்றேயொன்று கொடுக்கவே யோசித்தவள் நீதானா என திக்குமுக்காடிப் போனேன் உன் உதடுகளின் வேகம் கண்டு... போடா .. நீ அருகில் வர வர நான் விலகிபோகலாம் என்றால் என் வெட்கங்கள்தான் விலகிப்போய்கொண்டே இருக்க...